சிறிலங்கா அரசாங்கத்தினால் போர் வெற்றி நாளாகப் பிரகடனப்படுத்தப்பட்ட நேற்றைய தினம், வெலிக்கடைச் சிறைச்சாலைக்குச் சென்று, அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறிலங்கா படையினரை எல்லே குணவன்ச தேரர் சந்தித்தார்.
லசந்த விக்கிரமதுங்க படுகொலை, பிரகீத் எக்னெலிகொட கடத்தல், கீத் நொயார், உபாலி தென்னக்கோன் மீதான தாக்குதல்களில் தொடர்புடைய படையினருக்கு அவர் பிரித் ஓதி வழிபாடுகளை நடத்தி ஆசி வழங்கினார்.