இரு வாரங்களாக முஸ்லிம்களுக்கு எதிராக பலதரப்பட்ட தாக்குதல்களை முன்னெடுத்து வருகின்றனர். இது வரைக்கும் 21 சம்பவங்கள் நடந்தேறியுள்ளன. பள்ளிவாசல் மீதும் முஸ்லிம் வர்த்தக நிலையங்கள் மீதும் தாக்குதல்கள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதனை கருத்திற்கொண்டு முஸ்லிம்கள் வியாழக்கிழமை அரச, தனியார் நிறுவனங்கள், பாடசாலைகள் நிர்வாகங்கள் மற்றும் வர்த்தகர்கள் தமது கடமையில் இருந்து விலகி நடக்குமாறு அவ்வமைப்பு கோரியுள்ளது.