மூதூரில் வெடிபொருட்களுடன் ஒருவர் கைது!

மலைகளில் கல் உடைப்பதற்காக பயன்படுத்தும் வெடிபொருட்களை வீட்டில் மறைத்து வைத்திருந்த குற்றச்சாட்டில் திருகோணமலை மூதூர், ஆலிம்சேனைப் பிரதேசத்தில் 29 வயதுடைய ஒருவரை நேற்று (சனிக்கிழமை)   பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கல் உடைக்கும் தொழிலில் ஈடுபட்டுவரும் இச்சந்தேக நபர், வாடகைக்கு வசிக்கும் வீட்டில் இந்த வெடிப்பொருட்களை மறைத்து வைத்துள்ளார்.
இது தொடர்பில் இச்சந்தேக நபரை கைது செய்துள்ளதாகவும் இவரை நாளை (திங்கட்கிழமை) மூதூர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் தெர்ரிவித்துள்ளனர்.
வெடிபொருட்களுடன் ஒருவர் கைது
Comments (0)
Add Comment