சென்னையில் பாஜக அலுவலகம் அமைந்துள்ள கமலாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், தமிழக வெள்ள நிவாரண நிதிக்கு பிரதமர் மோடி 2 ஆயிரம் கோடி ரூபாய் அளித்ததாலேயே, 14 லட்சம் பேர் பயனடைந்ததாக கூறினார். ஆனால் மத்திய அரசின் திட்டங்களுக்கு மாநில அரசுகள் நற்பெயர் சம்பாதித்து கொள்வதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.