அம்மா!
சும்மா எல்லோரும்
கண்னெதிரே
காணும் கடவுள்,
என் அம்மா!
மனித உருவில் நான்
கண்ட தெய்வம்,
என்னை சுமந்தபோது-அவள்
கருவறை நிறைந்திருந்தது
வறுமையால்-அவள்
வயிறுமட்டும் வெறுமை
ஒற்றை வயிற்றை
நிரப்ப முடியாதவள்
பெற்ற என் வயிற்றை நிரப்ப
போராடினாள்…….
பற்றைக்குள் செத்த
மரங்களின் குச்சிகளை- தன்
வலிமைக்கேற்ப ஒடித்துக்கொண்டு
உச்சி வெய்லில்-அவள்
பாதணியில்லா பாதங்களை
பதித்து வந்து- என்
பசி போக்கினாள்….
சில நேரம்-அவள்
விற்காத விறகுகளை
விலையேதும் பேசாமல்
அரைப்படி அரிசிக்காய் போட்டுவிட்டு
அரைவயிறேனும் எனக்கு
நிரப்பிவிட்டாள். – அவள்
நிரந்தரமாய் தன் வயிற்ரை
காயவிட்டு…
அம்மாவின் கண்ணோரம்
நித்தம் கண்ணீர் கண்டேன்,
என்னம்மா என்று கேட்க
வியர்வை அது என்று
விரலால் ஒற்றிக்கொள்வாள்.
இன்றுவரை புரியவில்லை?…
வறுமையை நினைத்து அழுதாளோ?
பசியால் அழுதாளோ?
காலத்தின் சுழற்ச்சி- என்
வளர்ச்சி
சொத்துக்கள் சேர்ந்தது
சொந்தங்கள் ஒட்டிக்கொண்டது,
சோதனைகள் எம்மை
தொட்ட போது
விட்ட சொந்தங்களை-நான்
தேடவில்லை.
பெற்றவர்கள் கைவிட்ட
பெற்றோரை நான் தேடுகிறேன்
என் அம்மாவின் முகத்தை
அவர்கள் அன்பினிலே
கண்டுகொண்டேன்.
அரைவயிற்றுக்காய்
போராடிய நான் இன்று
அம்மாவின் நினைவோடு
முதியவர் காப்பகம் நோக்கியே
என் பயணம்……….
ஆக்கம்:-
சி.கலைவிழி