இராணுவ சிப்பாயின் ஒருதலைக் காதல்! கேப்பாப்புலவில் அசாதாரண நிலை.

முல்லைத்தீவு –மாதிரி கிராமத்தில் யுவதி ஒருவரை இராணுவ சிப்பாய் ஒருவர் வலுக்கட்டாயமாக திருமணம் செய்து கொள்ள முயற்சித்துள்ளதால், அப்பகுதியில் அசாதாரண நிலை ஏற்பட்டுள்ளது.

கேப்பாப்புலவில் மாதிரிக்கிராமத்தில் வீடு ஒன்று அமைத்துக் கொடுக்கும் போது அந்த பகுதியில் உள்ள யுவதி ஒருவர் மீது குறித்த இராணுவ சிப்பாய்க்கு ஒரு தலைக் காதல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், தற்பொழுது அந்த யுவதியை திருமணம் செய்து கொள்ள இராணுவ முயற்சித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் கேப்பாப்புலவு மக்கள், முள்ளியவளை பொலிஸாருக்கு தகவல் வழங்கிய நிலையில் சம்பவ இடத்திற்கு பொலிஸார் விரைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இராணுவ சிப்பாய்கேப்பாப்புலவுபொலிஸார்முல்லைத்தீவு
Comments (0)
Add Comment