இராணுவ முகாம்களை அகற்றுமாறு கிளி மக்கள் கோரிக்கை!

கிளி­நொச்சி பூந­கரி விக்­கி­னேஸ்­வரா வித்­தி­யா­ல­யத்தின் ஒரு பகுதி இரா­ணுவ முகா­மா­கவும் கிளி­நொச்சி மகா வித்­தி­யா­ல­யத்தின் ஆரம்ப பிரிவு வளாகம் நுண்­க­லைக்­கல்­லூரி வளாகம் என்­பன இரா­ணு­வப்­ப­யன்­பாட்­டிலும் கடந்த ஆறு ஆண்­டு­க­ளாக இருந்து வரு­கின்­றன.

தற்­போது நல்­லாட்சி ஏற்­பட்­டுள்­ளதென சொல்­லப்­ப­டு­கின்­றது ஆனால் சாதா­ர­ண­மாக மாண­வர்கள் கல்வி கற்க கூடிய சூழல் ஒன்று இல்லை பாட­சா­லை­க­ளுக்கு முன்னால் இரா­ணுவ முகாம்கள் காணப்­ப­டுதல் மற்றும் பாட­சாலை வளா­கங்கள் இரா­ணுவப் பயன்­பாட்டில் உள்­ளமை மாண­வர்­களின் கல்­வியை பெரிதும் பாதிக்­கின்­றன.

கிளி­நொச்சி மகா வித்­தி­யா­ல­யத்தின் ஆரம்ப பிரி­வுக்­கான காணி இன்னும் இராணுவ கட்­டுப்­பாட்டில் இருந்து வரு­கின்­றது. ஏற்­க­னவே யுத்­தத்­திற்கு முன்னர் குறித்த காணியில் இரு கட்­ட­டங்கள் அமைப்­ப­தற்­கான அத்­தி­வாரம் போடப்­பட்ட நிலையில் உள்­ள­துடன், இதே­போன்று பூந­கரி விக்­கி­னேஸ்­வரா வித்­தி­யா­ல­யத்தின் அரு­கிலும் பாட­சாலை வளா­கத்தில் பாரிய இரா­ணு­வ­முகாம் இருக்­கின்­றது. இவற்றை அகற்றி மாண­வர்­களின் இயல்­பான கற்றல் செயற்­பா­டு­க­ளுக்கு நல்­லாட்­சியில் வழி­வகை செய்­யப்­ப­ட­வேண்டும்.

இதே­வேளை பூந­கரி விக்­கி­னேஸ்­வரா வித்­தி­யா­ல­யத்­திலும் ஏனைய சில பாட­சா­லை­களும் இரா­ணு­வத்தின் சூழல் வட்­டத்­திற்குள் பாட­சா­லைகள் உள்­ளன. விக்­கி­னேஸ்­வரா வித்­தி­யா­ல­யத்தில் இரா­ணு­வத்­தினர் எந்த அனு­ம­தியும் இன்றி அமைத்­துள்ள கட்­டடம் இடிந்து விழும் நிலையில் உள்­ளது.

இதனை வல­யக்­கல்விப் பணிப்­பாளர் கவ­னத்தில் எடுக்­க­வேண்டும் எனவும் பாட­சா­லை­க­ளுக்கு அருகில் உள்ள இரா­ணுவ முகாம்­களை அகற்றி வேறு இடங்­க­ளுக்கு கொண்டு செல்­ல­வேண்டும். பாட­சா­லையில் இருக்கும் இரா­ணுவ வலயம் நீக்­கப்­ப­ட­வேண்டும் என்­பதை எழுத்து மூல­மாக வட மாகாண கல்வி அமைச்சு கோர வேண்டும். முழங்­காவில் மகா வித்­தி­யா­ல­யத்தில் உள்ள ஆசி­ரியர் விடு­தியில் இடம்­பெற்ற சம்­ப­வமும் அதன் பின்னர் இரா­ணு­வத்­தினர் அங்­கி­ருந்து வெளியேறிய சம்பவமும் உள்ளது. எனவே பாடசாலைகளுக்கு அருகில் உள்ள இராணுவத்தினர் உடனடியாக வெளியேற்றப்பட்ட வேண்டும் எனவும் மாவட்ட சிவில் சமுக பிரதிநிதிகள் பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இராணுவ முகாம்கள்கிளி மக்கள்கோரிக்கைபாடசாலை
Comments (0)
Add Comment