ஈழ அகதியை நாடு கடத்தியதற்கு பிரிட்டிஷ் பிரதமருக்கு நீதிமன்றம் கண்டனம்!

பிரித்தானியாவின் பிரதமர் தெரேசா மேய், முன்னர் உள்துறை செயலாளராக இருந்த காலப்பகுதியில், ஈழ அகதி ஒருவர் நாடுகடத்த உத்தவிரவிட்டமை தொடர்பில் ஸ்கொட்லாந்தின் நீதிமன்றம் ஒன்று கண்டனம் தெரிவித்துள்ளது.
2013ம் ஆண்டு குறித்த ஈழ அகதி தமது நாடுகடத்தல் உத்தரவை ரத்து செய்யுமாறு கோரி தெரேசா மேயிற்கு கடிதம் அனுப்பி இருந்தார்.
எனினும் இந்த கடிதம் உடனடியாக நிராகரிக்கப்பட்டது.
இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டால் துன்புறுத்தல்களுக்கு ஆளாக நேரும் என்ற நிலையில் அவர் இந்த கடிதத்தை அனுப்பி இருந்தார்.
அத்துடன் அவரது ஆபத்துகள் குறித்து இலங்கையில் உள்ள அவரது சகோதாரியால் அனுப்பி வைக்கப்பட்டக் கடிதம் ஒன்றும், குறித்த அகதிகளின் கடிதத்தில் இணைக்கப்பட்டிருந்தது.
எனினும் இதனை தெரேசா மேய் நிராகரித்தமை மிகவும் பிழையான தீர்மானம் என்ற ஸ்கொட்லாந்தின் சிரேஷ்ட்ட நீதிபதியான லோர்ட் போயிட் தெரிவித்துள்ளார்.

அகதிகள்ஈழ அகதிதிரேசா மேநாடு கடத்தல்பிரதமர்பிரித்தானியாஸ்கொட்லாந்து
Comments (0)
Add Comment