கன மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்திருப்பதால் ஏராளமான பொதுமக்கள் வெள்ளத்தில் சிக்கியுள்ளனர்.
எனவே, சென்னையில் மீட்புப் பணிகளை மேற்கொள்ள அரக்கோணத்தில் இருந்து பேரிடர் மேலாண்மை மீட்புக் குழுவைச் சேர்ந்த 70 பேர் சென்னைக்கு விரைந்துள்ளனர்.
இவர்கள் 2 குழுக்களாகப் பிரிந்து தாம்பரம் மற்றும் செங்கல்பட்டு பகுதிகளில் மீட்புப் பணிகளை மேற்கொள்ள உள்ளனர்.