கிளிநொச்சி கரடிப்போக்கில் இன்று காலை மின்சார சபை வாகனமும் தென்பகுதியிலிருந்து சுற்றுலாவுக்காக வந்த வாகனமும் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 70 வயதான மூதாட்டி உயிரிழந்துள்ளார். புத்த பிக்கு உட்பட ஆறு பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் கிளிநொச்சி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். மேலதிக விசாரணைகளை கிளிநொச்சிப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.