கிளிநொச்சி இரத்தினபுரம் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையொன்றில், கிணறு ஒன்றிலிருந்து கிளைமோர் நிலக்கண்ணி வெடிகள் 10, கிரனேட்கள் 65 உள்ளடங்கலான வெடிபொருட்கள், வெடிமருந்துகள் மீட்கப்பட்டதாக ஸ்ரீலங்கா இராணுவம் தெரிவித்துள்ளது. எனினும் மீட்கப்பட்ட கிளைமோர் நிலக்கண்ணி வெடிகள் 10, கிரனேட்கள் 65 ஆகியவை பயன்படுத்த முடியாத நிலையில் இருந்ததாக ஸ்ரீலங்கா இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.