கிளியில் சட்டவிரோத விடுதிகளுக்கு விரைவில் நடவடிக்கை!

கிளி­நொச்­சியில் பதிவு செய்­யப்­ப­டாது சட்­ட­வி­ரோ­த­மாக இயங்கி வரும் விடு­தி­களை சோத­னை­யிட்டு அவற்­றிற்கு எதி­ராக சட்ட நட­வ­டிக்கை விரைவில் எடுக்­கப்­படும் என கிளி­நொச்சி மாவட்ட அர­சாங்க அதிபர் சுந்­தரம் அரு­மை­நா­யகம் தெரி­வித்­துள்ளார்.

கிளி­நொச்­சியின் பல்­வேறு பகு­தி­க-­ளிலும் பதிவு செய்­யப்­ப­டா­ததும் சட்­ட­வி­ரோ­த­மான முறை­யிலும் விடு­திகள் மற்றும் வாட­கை­ய­றைகள் என்­பன காணப்­ப­டு­கின்­றன. இவற்றின் மூலம் பல்­வேறு சட்­ட­வி­ரோத செயற்­பா­டுகள் இடம்­பெற்று வரு­கின்­றன.

குறிப்­பாக பெண்­க­ளுக்­கான வேலை­வாய்ப்­புக்கள் என்ற போர்­வையில் பெண்கள் அழைத்து வரப்­பட்டு விடு­தி­களில் தங்க வைக்­கப்­பட்டு துஷ்­பி­ர­யோ­கத்­திற்கு உள்­ளாக்­கப்­ப­டு-­கின்-­றமை போன்ற சம்­ப­வங்கள் கடந்த காலங்­களில் இடம்-­பெற்­றி­ருக்­கின்­றன.

இந்­நி­லையில் கிளி­நொச்சி மாவட்­டத்தின் பதி­விற்கு உட்­ப­டுத்­தப்­ப­டாத விடு­திகள் உட­ன­டி­யாக பதி­வு­க­ளிற்கு உட்­ப­டுத்­து­மாறும் இவ்­வாறு பதி­வு­க­ளிற்கு உட்­ப­டுத்­தாத விடுதிகளை சோதனையிட்டு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.

கிளியில்சட்டவிரோதநடவடிக்கைவிடுதிகளுக்குவிரைவில்
Comments (0)
Add Comment