கிளி மாணவி தனக்குத்தானே தீ மூட்டி தற்கொலை!

கிளிநொச்சியில் மாணவி ஒருவர் தீமூட்டித் தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை செய்தவர் கிளிநொச்சி கனகாம்பிகைக்குளம் பகுதியில் வசிக்கும் 17 வயதுடைய கிஷ்ணகுமார் வர்ணுஜா என அடையாளம் காணப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் இன்று புதன்கிழமை (21) இடம்பெற்றுள்ளது.

குறித்த மாணவியின் தந்தை வன்னியில் நடைபெற்ற யுத்தத்தின்போது உயிரிழந்த நிலையில் தாயின் உதவியினால் மாணவியின் உயர் நிலைக் கல்வி கற்பதற்கு யாழ்ப்பாணத்தில் கற்று வந்ததாகவம் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கல்விகிளிநொச்சிதற்கொலைதீக்குளிப்புமாணவியாழ்ப்பாணம்
Comments (0)
Add Comment