அன்னை ஈசுவராம்பா முன்பள்ளி, இளநிலா முன்பள்ளி, சரசுவதி முன்பள்ளி ஆகிய மூன்று முன்பள்ளிகள் உள்வாங்கப்பட்டு இவ்வுதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
மேலும் இந் நிகழ்வானது 01.10.2018 இன்றைய நாள்காலை 09.30மணியளவில் இடம்பெற்றுள்ளது.
புலம்பெயர்ந்து பிரித்தானியாவில் வாழும் திரு.திலீபன் – கந்தப்பிள்ளை அவர்களால் இவ்வுதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
அத்துடன் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா – ரவிகரன் அவர்கள் மற்றும் கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர் சின்னராசா – லோகேசுவரன் ஆகியோர் கற்றல் கருவிகளை சிறார்களுக்கு வழங்கிவைத்தனர்.
மேலும் இந் நிகழ்வில் மிசுபா செப மிசனரி ஆலய போதகர் சவரிமுத்து – யோன்சன்சதீசுக்குமார் அவர்கள், முன்பள்ளி ஆசிரியர்கள்,சிறார்கள் என பலரும் கலந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.