ஜனாதிபதி ஆணைக்குழு முன் ஆஜரானார் சோமதிலக்க திஸாநாயக்க

முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் சோமதிலக்க திஸாநாயக்க பாரிய மோசடி மற்றும் ஊழல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு சென்றுள்ளார்.

இன்று காலை அவர் ஆணைக்குழுவில் அவர் ஆஜராகியுள்ளதாக தெரியவந்துள்ளது. ரத்னா லங்கா நிறுவனம் தொடர்பில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளுக்காக வாக்குமூலம் பெறவே அவர் அழைக்கப்பட்டதாக ஆணைக்குழுவின் செயலாளர் லெசில் டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.

ஆணைக்குழுசோமதிலக்க திஸாநாயக்கஜனாதிபதிரத்னா லங்காலெசில் டி சில்வாவாக்குமூலம்
Comments (0)
Add Comment