நீதிபதி எம். சாந்தி முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட இவ்வழக்கில் கொழும்பிலுள்ள இந்திய தூதரகத்திலிருந்து காணொளியூடாக டக்ளஸ் தேவானந்தா நீதிமன்றத்திற்கு சமுகமளித்திருந்தார்.
இதன்போது ஐவர் நேரடியாக சம்பவம் தொடர்பாக சாட்சியமளித்திருந்தனர். இந்நிலையில் சாட்சியங்களின் பதிவுகளையடுத்து குறித்த வழக்கு இம்மாதம் 29 ஆம் திகதிக்கு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.