வடமாகாண வைத்தியசாலைகளில் நிலவி வந்த தாதியர் வெற்றிடங்களுக்கு தென்னிலங்கையை சேர்ந்த 92 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். தாதியர்களாக தேர்வு செய்யப்பட்ட 92 பேரில் அண்மையில் ஜனாதிபதியிடம் நியமனக் கடிதங்களை பெற்றுக்கொண்ட தென்னிலங்கையை சேர்ந்த 84 பெண் தாதியர்களும் இன்று முதல் வடமாகாணத்தில் கடமையாற்றவுள்ளனர்.
இவர்கள் மன்னார், கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு ஆகிய நான்கு மாவட்ட வைத்தியசாலைகளிற்கும், பருத்தித்துறை, தெல்லிப்பழை, சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைகளிற்கும், நியமிக்கப்படவுள்ளனர்.
வடக்கு, கிழக்கு பகுதிகளை சேர்ந்த தாதியர் பயிற்சியை நிறைவு செய்து விட்டு வேலையின்றி ஏராளமான இளைஞர், யுவதிகள் இருக்கும் நிலையில் தமிழ் பிரதேசங்களில் தமிழ் பேசமுடியாத சிங்களத் தாதியர்களை நியமிக்கப்பட்டுள்ளனர்.