எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 21 ஆம் திகதி வழக்கு எடுத்துகொள்ளப்படும் வரை எவ்வித கட்டுமான பணிகளையும் மேற்கொள்ள முடியாது என, அவர் தனது உத்தரவில் தெரிவித்தார்.
நாவற்குழி பகுதியில் அனுமதி பெறாது அமைக்கப்பட்டுவரும் விகாரை தொடர்பாக பலராலும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுவந்ததுடன், அனுமதியற்ற கட்டடம் அமைக்கப்படுவது தொடர்பாகவும் சாவகச்சேரி பிரதேச சபையால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் குறித்த வழக்கு இன்று எடுத்துக்கொள்ளப்பட்டபோது, சாவகச்சேரி நீதவான் நீதிமன்ற நீதவான் கட்டடம் அமைப்பதற்கு தடையுத்தரவு பிறப்பித்தார்.