புலிகளின் புலனாய்வுத்துறையைச் சேர்ந்த ஆதவன் மாஸ்டர் கைது!

தமி­ழீழ விடு­தலைப் புலி­களின் முக்­கி­யஸ்தர் எனக் கூறப்­படும் ஆதவன் மாஸ்டர் எனும் அய்­யாத்­துரை மோகன்தாஸ் ஸ்ரீலங்கா பயங்­க­ர­வாத புல­னாய்வுப் பிரி­வி­னரால் கைது செய்­யப்பட்­டுள்­ள­தாக பொலிஸ் தக­வல்கள் தெரி­விக்­கின்­றன.

இந்­தி­யா­வுக்கு தப்பிச் செல்ல முற்­பட்ட போது, கட்­டு­நா­யக்க சர்­வ­தேச விமான நிலை­யத்தில் வைத்து அவர் பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்தின் கீழ் கைது செய்­யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சாவ­கச்­சேரி – மற­வன்­பு­லவு பிர­தேச வீடொன்றில் தற்­கொலை அங்கி உட்­பட வெடிப் பொருட்கள் கைப்­பற்­றப்­பட்ட சம்­ப­வத்­துடன் தொடர்­பு­டைய பிர­தான சந்­தேக நப­ராக கரு­தியே அவர் கைது செய்­யப்பட்­டுள்­ள­தாக அறிய முடி­கி­றது.

இது குறித்து பயங்­க­ர­வாத புல­னாய்வுப் பிரிவின் பதில் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக சில்­வாவின் கீழ் முன்­னெ­டுக்­கப்பட்டு வரும் விசா­ர­ணை­களில் இது­வரை முன்னாள் விடு­தலைப் புலிகள் இயக்­கத்தைச் சேர்ந்த புல­னாய்­வா­ளர்கள் 15 இற்கும் மேற்­பட்டோர் கைது செய்­யப்பட்­டுள்ள நிலையில் குறித்த அணியை ஆதவன் மாஸ்­டரே வழி நடத்­தி­யுள்­ள­தாக தக­வல்கள் வெளியாகியுள்ளதாகவும் பாதுகாப்பு தரப்பினர் தெரிவிக்கின்றனர்.

இந் நிலையில், யாழ்ப்­பா­ணத்தில் உள்ள ஆதவன் மாஸ்­டரின் வீட்டை பயங்­க­ர­வாத புல­னாய்வு பிரி­வினர் சோத­னை­யிட்­ட­போதும் அவர் அங்­கி­ருந்து தப்பிச் சென்­றி­ருந்தார். இந் நிலை­யி­லேயே நேற்று முன் தினம் கட்­டு­நா­யக்க ஊடாக இந்­தி­யா­வுக்கு தப்பிச் செல்ல முற்­பட்­ட­போது ஆதவன் மாஸ்டர் கைது செய்­யப்பட்­ட­தாக பொலிஸ் தக­வல்கள் தெரி­வித்­தன.

போர் நடை­பெற்ற காலத்தில் மன்னார் மற்றும் வன்னி பிர­தே­சங்­களில் புலி­களின் புல­னாய்வுப் பிரிவின் தலை­வ­ராக செயற்­பட்டு வந்த ஆதவன் மாஸ்டர், 2009 ஆம் ஆண்டு போர் முடி­வுக்கு வந்த பின்னர் இராணுவத்தினரிடம் சரணடைந்தார்.

சுமார் ஒன்றரை மாதம் புனர்வாழ்வு முகாமில் இருந்த இவரை பின்னர், இராணுவ புலனாய்வுப் பிரிவினர் தமது பொறுப்பில் எடுத்துக்கொண்டனர்.

இந்தியாகட்டுநாயக்ககைதுபுலனாய்வுத்துறைவிடுதலைப் புலிகள்விமான நிலையம்
Comments (0)
Add Comment