நேற்று மாலை யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட பெற்றோல் குண்டு தாக்குதலுக்கு இலக்கான வர்த்தக நிலையம் ஆவா குழு தலைவருடையது என தெரிவிக்கப்படுகின்றது.
மோட்டாரெ சைக்கிளில் சென்ற இனந்தெரியாதவர்களால் குறித்த வியாபார நிலையத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்பட்டிருந்தது
தனிப்பட்ட பிரச்சினை காரணமாகவே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் குறித்த வர்த்த நிலையம் ஆவா குழு தலைவருடையது என பொலிஸாரின் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது