போக்குவரத்து,குடிநீர் இன்றி தட்டுவன்கொட்டி மக்கள் பெரும் அவதி!

கிளி­நொச்சி, தட்­டு­வன்­கொட்டி கிரா­மத்தின் பிர­தான வீதி புன­ர­மைக்­கப்­ப­டாமை மற்றும் போதிய குடிநீர் வச­தி­யின்மை கார­ண­மாக 99 குடும்­பங்­களைச் சேர்ந்த 347 பேர் அன்­றாடம் பல்­வேறு சிர­மங்­களை எதிர்­கொண்டு வரு­கின்­றனர். கிளி­நொச்சி கண்­டா­வளை பிர­தேச செயலர் பிரிவின் கீழுள்ள மிகவும் பழைமை வாய்ந்த ஓர் கிரா­ம­மாகக் காணப்­படும் தட்­டு­வன்­கொட்­டிக்­ கி­ரா­மத்தின் அடிப்­படைத் தேவைகள் பூர்த்தி செய்­யப்­ப­டா­மை­யினால் அங்கு வாழும் மக்கள் தினமும் பல்­வேறு சிர­மங்­களை எதிர்­கொண்டு வரு­கின்­றனர்.

குறித்த கிரா­மத்தின் பிர­தான வீதி­யாக காணப்­படும் ஆனை­யி­றவு – தட்­டு­வன்­கொட்டி வீதி இன்று வரை புன­ர­மைக்­கப்­ப­டாமல் காணப்­ப­டு­வ­துடன், இத­னூ­டாக மக்கள் பய­ணிக்க முடி­யாத நிலையும் காணப்­ப­டு­கின்­றது. இதே­வேளை குறித்த கிரா­மத்­திற்­கான குடிநீர் வழங்கல் வேறு பகு­தி­யி­லி­ருந்து கொண்டுவரப்­பட்டு கரைச்சிப் பிர­தேச சபை­யினால் விநி­யோ­கிக்­கப்­பட்டு வரு­கின்­ற­போதும் போது­மான குடிநீர் கிடைப்­ப­தில்லை எனவும் அவ்­வாறு தமக்குத் தேவை­யான குடி­நீரைப் பெறு­வ­தற்கு பரந்தன் அல்­லது இயக்­கச்சி ஆகிய இடங்­க­ளுக்குச் சென்றே பெறவேண்­டி­யுள்­ளது என அப்­ப­குதி மக்கள் தெரி­விக்­கின்­றனர். மேலும் பிர­தேச சபை­யினால் சீரான குடி­நீர்­வி­நி­யோகம் இடம்­பெ­று­வ­தில்லை. குறிப்­பாக, வீதி சீரின்­மையால் குடிநீர் பெற்­றுக்­கொள்­ள­ மு­டி­யாத நிலை காணப்­ப­டு­கின்­றது. இவ்­வாறு பிர­தேச சபையின் குடிநீர் விநியோகம் சீராக இடம்பெறாமையினால் வரட்சி காரணமாக குடிநீர்த் தேவை அதிக-ரித்துக் காணப்படுகின்றது என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

கண்டாவளைகிராமம்கிளிநொச்சிகுடிநீர்புனரமைப்புபோக்குவரத்துமக்கள்
Comments (0)
Add Comment