இந்நிலையில் தனது கைப்பட முதல்வர் ஜெயலலிதா அறிக்கை ஒன்று எழுதியுள்ளார். அதில் ‘‘மக்கள் பிரார்த்தனையால் மறுபிறவு எடுத்துள்ளேன். இறைவனின் திருவருளால் நலம் பெற்று திரும்புவேன். ஓய்வு நான் அறியாதது. உழைப்பு என்னை நீங்காது. மக்களின் பேரன்பு இருக்கும்போது எந்த குறையும் எனக்கில்லை. வெகுவிரைவில் முழுமையான நலம்பெற்று பணிக்கு திரும்புவேன். வழக்கமான பணியில் ஈடுபட காத்திருக்கிறேன்’’ என்றார்.