முதியவர் தற்கொலை முயற்சியால் வழக்கு ஒத்திவைப்பு!

பாடசாலை மாணவியாகிய 14 வயது சிறுமியுடன் பாலியல் வல்லுறவு கொண்டு, 63 வயதுடைய முதியவர் ஒருவர் அவரைத் தாயாக்கிய சம்பவம் தொடர்பான வழக்கு எதிர்வரும் 16ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
பாடசாலை மாணவியாகிய 14 வயது சிறுமியுடன் பாலியல் வல்லுறவு கொண்டு, 63 வயதுடைய முதியவர் ஒருவர் அவரைத் தாயாக்கிய சம்பவம் தொடர்பான வழக்கு இன்று. யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போது குறித்த சிறுமியை தாயாக்கிய முதியவர் நஞ்சருந்தி தற்கொலைக்கு முயன்றதால் அவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதால் அவர் இன்றைய தினம் நீதிமன்றிற்கு சமூகமளிக்கவில்லை. எனவே குறித்த வழக்கை எதிர்வரும் 16ஆம் திகதிக்கு ஒத்திவைத்ததுடன் முதியவருக்கு பொலிஸ் பாதுகாப்பு அளிக்குமாறும், சிகிச்சை பெற்று வெளியேறும் போது அவரை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்த வேண்டும் எனவும் பொலிஸாருக்கு உத்தரவிட்டார் நீதிபதி இளஞ்செழியன்.
கடந்த 2009 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 5 ஆம் திகதி இந்த வல்லுறவுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவ நேரம் பாதிக்கப்பட்ட மாணவிக்கு வயது 14 வருடம் 4 மாதம். எதிரியாகிய முதியவருக்கு 63 வயது. இந்த வன்புணர்வு காரணமாக பாதிக்கப்பட்ட மாணவிக்குப் பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளின் பின்னர் முதியவர், மாணவி, மாணவிக்குப் பிறந்த குழந்தை ஆகிய மூவரினதும் இரத்தத்தில் மரபணு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, அது தொடர்பான அறிக்கை நீதிமன்றத்திற்கு ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சிறுமிதற்கொலைநீதிமன்றம்பாலியல்முதியவர்வழக்கு
Comments (0)
Add Comment