யாழ். சிறையில் இருந்து 9 கைதிகள் விடுதலை

யாழ். சிறைச்சாலையில் தண்டப்பணம் செலுத்த முடியாததால் சிறை தண்டனை அனுபவித்து வந்த 9 பேர்  04-02-2014 காலை விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

சிறிலங்காவின்  66வது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு சிறிலங்கா ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் இவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

சிறு குற்றங்கள் புரிந்து தண்டப்பணத்தை கட்ட முடியாததனால் சிறைத்தண்டனை பெற்ற ஒரு பெண் கைதி உட்பட 9 கைதிகளை சுதந்திரதினத்தை முன்னிட்டு சிறிலங்கா ஜனாதிபதியின் பொது மன்னிப்பில் விடுதலை செய்ததாக யாழ். சிறைச்சாலை அத்தியட்சகர் எச்.எம். பெரேரா தெரிவித்குள்ளார்.

விடுதலை
Comments (0)
Add Comment