இராணுவத்தினர் வசமுள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பான மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் சமர்ப்பித்த அமைச்சரவை பத்திரத்திற்கே அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அத்துடன் தொடர்ந்தும் வடக்கில் 5 ஆயிரத்து 840 ஏக்கர் காணிகள் இராணுவம் வசம் காணப்படுகிறது. இந்நிலையிலேயே 948 ஏக்கர் காணி விடுவிக்கப்படவுள்ளதாகவும், அதில் 2,050 பேரை மீள்குடியமர்த்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.