2012 மற்றும் 2013ம் ஆண்டு காலப்பகுதிகளில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பில் முதலமைச்சரால் நியமிக்கப்பட்ட விசாரணைக்குழுவின் அறிக்கையின் பிரகாரம் இவ்விசாரணைகள் மேற்கொள்ளப்படவிருப்பதாக தெரியவருகின்றது.
குறிப்பிட்ட நகரசபைகள் மற்றும் மாநகரசபையில் பாரிய நிதி மோசடிகள் இடம்பெற்றதாகப் பங்காளிகளாலேயே குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தது. சபைகள் ஒழுங்காக இயங்க முடியாத நிலையும் ஏற்பட்டிருந்தது.
குறிப்பாக கூட்டமைப்பின் வசமிருந்த நகரசபைகளில் பல மில்லியன் மோசடிகள் இடம்பெற்றதாகப் பங்காளிக்கட்சிகள் குற்றஞ்சாட்டியிருந்ததுடன் அவற்றினை சுமூகமாக இயங்கவிடாது குழப்பியடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.