கடந்த முதலாம் திகதி தான் கல்வி கற்கும் சிதம்பரபுரம் சிறிநாகராஜா வித்தியாலயத்திற்கு சென்று விட்டு வீடு திரும்பிய பின்னர், மீண்டும் வீட்டில் இருந்து வெளியே சென்ற சிறுவன் இன்று வரை வீடு திரும்பவில்லை. இந் நிலையில், தமது உறவினர்கள், தெரிந்தவர்கள் எனப் பல இடங்களுக்கும் சென்று தேடிய நிலையில் சிறுவன் கிடைக்காமையால் வவுனியா பொலிஸ் நிலையத்தில் சிறுவனின் பெற்றோரால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான விசாரணைகளை வவுனியா பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.