கடையுடன் வீடும் எரிந்ததால் குடும்பம் நிர்க்கதி!

கிளி­நொச்­சியில் வியா­பார நிலை­யத்­து­ட­னான வீடு ஒன்று முற்­றாக எரிந்து நாச­மா­கி­யுள்­ளது. இதனால் குறித்த கடை மற்றும் வீட்டலிருந்த ஆடைகள், ஆவ­ணங்கள் அனைத்தும் எரிந்துள்ள நிலையில் குடும்­பத்­தினர் நிர்க்­க­தி­யா­கி­யுள்­ளனர்.கிளி­நொச்சி டிப்போ வீதியில் ஜீவா பரி­யாரி ஒழுங்­கையில் அமைந்­துள்ள வியா­பார நிலையம் நேற்­று­முன்­தினம் சனிக்­கிழமை இரவு 11 மணி­ய­ளவில் கடையின் உரி­மை­யாளர் குடும்­பத்­துடன் உயிர்த்த ஞாயிறு வழி­பாட்­டுக்­காக கிளி­நொச்சி நகரில் அமைந்­துள்ள புனித திரேசா ஆல­யத்­திற்குச் சென்­றுள்ள போதே இச் சம்­பவம் இடம்­பெற்­றுள்­ளது.

இரவு 11.20 மணி­ய­ளவில் வியா­பார நிலையம் தீப்பிடித்து எரிந்­து­கொண்­டி­ருந்த தக­வலை அயல் வீட்­டுக்­காரர் தொலை­பேசியில் தெரி­யப்­ப­டுத்­தி­ய­தனைத் தொடர்ந்து உரி­மை­யாளர் விரைந்து சென்று பார்த்த போது முற்­றாக வியா­பார நிலையம் எரிந்­தி­ருந்­தது. தீ எவ்­வாறு ஏற்­பட்­டது என்­பது தொடர்பில் அறி­யப்­ப­ட­வில்லை. வியா­பார நிலை­யத்தில் காணப்­பட்ட மேசை மற்றும் அதனுள் இருந்த 50 ஆயிரம் ரூபா பணம் என்­ப­னவும் எரிந்­துள்­ளன. அத்­துடன் வியா­பார நிலை­யத்­துடன் சேர்ந்து அவர்கள் வசிக்கும் வீடும் காணப்­பட்­டுள்­ள­மையால் வீட்டில் உள்ள ஆவ­ணங்கள் மற்றும் ஆடைகள் உள்­ளிட்ட அனைத்தும் எரிந்த நிலையில் குடும்பம் நிர்க்­க­திக்­குள்­ளான நிலையில் உள்­ளது.

நான்கு பிள்­ளைகள் கல்வி கற்­கின்ற குடும்­பத்தில் அவர்கள் கற்றல் உப­க­ர­ணங்கள், பாட­சாலைச் சீருடை உள்­ளிட்ட ஆடைகள், தேசிய அடை­யாள அட்­டைகள், பிறப்பு அத்­தாட்­சிப்­பத்­திரம் உள்­ளிட்ட ஆவ­ணங்கள் யாவும் தீக்­கி­ரை­யா­கி­யுள்­ளன.

தரம் 11, 8, 7, 1 இல் கல்வி கற்கும் மாண­வர்­களில் மூவரும் தரம் ஐந்து புலமை பரிசில் பரீட்­சையில் சித்­தி­ய­டைந்த மாண­வர்கள். இவர்கள் பாட­சா­லைக்குச் செல்ல முடி­யாத அவல நிலை ஏற்­பட்­டுள்­ளது. மேலும் பெற்றோல் விற்­ப­னை­யிலும் ஈடு­படும் குறித்த வியா­பார நிலை­யத்தில் சம்­பவம் இடம்­பெற்ற அன்று இரவு மூன்று லீற்றல் பெற்றோல் காணப்­பட்­ட­தா­கவும் அவற்றை எடுத்து பிறிதொரு இடத்தில் வழமை போன்று வைத்துவிட்டு சென்ற நிலையில் அதில் ஒரு லீற்றல் பெற்றோல் போத்தலுடன் காணாமல் போயுள்ளதாகவும் கடை உரிமையாளர் தெரிவித்தார்.

ஈஸ்டர்கடைகிளிநொச்சிஜீவா பரியாரிடிப்போபெட்ரோல்வியாபாரம்வீடு
Comments (0)
Add Comment