வீடுகள் மற்றும் பொது இடங்களில் கறுப்பு கொடிகளை பறக்கவிடுமாறு கோரிக்கை!

முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் கரங்களை பலப்படுத்தும் வகையில் வீடுகள் மற்றும் பொது இடங்களில் கறுப்பு கொடிகளை பறக்கவிடுமாறு வவுனியா பிரஜைகள் குழு கோரியுள்ளது.

மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் முதலமைச்சரான சி.வி.க்கு எதிரான தமிழரசு கட்சியின் செயற்பாடு தமிழ் தேசியத்திற்கு எதிரான செயற்பாடாகவே நோக்கப்படுகிறது.

வட. பகுதி மக்களின் துன்பங்களை தீர்க்க நோக்கில் முதலமைச்சர் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்ற நிலையில், தமிழரசு கட்சி முன்னெடுக்கும் நடவடிக்கை ஏற்க முடியாததாகும்.

எனவே முதலமைச்சரின் கரங்களை பலப்படுத்தும் வகையில், அதன் முதற்கட்டமாக வீடுகள் மற்றும் பொது இடங்களில் கறுப்பு கொடிகளை பறக்கவிடுமாறு கோரப்பட்டுள்ளது.

கறுப்பு கொடிமுதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்
Comments (0)
Add Comment