தமது பிரதேசத்தின் உரிய முறையில் புனரமைக்கப்படாத நிலையில் வேறு பிரதேசங்களுக்கு வீதி புனரமைப்பதற்காக விசுவமடுப்பிரதேசத்தில் கிரவல் அகழ்ந்து செல்லும் பாரவூர்திகளால் வீதிகள் மேலும் சேதமடைவதாக தெரிவித்த மக்கள் குறித்த பாரவூர்திகளை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், விசுவமடு பிரதேசத்தின் உள்வீதிகளை திருத்துவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.