வைக்கோவின் பொடா வழக்கு ரத்து

பொடா வழக்கை திரும்பப் பெற முடியாது என்ற பொடா நீதிமன்றம் பிறிப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுவதாக, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வைகோ உள்ளிட்டோரின் மனுவை ஏற்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருமங்கலத்தில் 2002ல் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகபேசியதாக 9 பேர் மீது வழக்குப் போடப்பட்டது. வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 9 பேரில் வீர இளவரசன், பி.எஸ்.மணியம் ஆகியோர் உயிரிழந்தனர்.

2004ல் பொடா வழக்கை திரும்பப் பெறுவதாக அரசு தரப்பு தெரிவித்தும் நீதிமன்றம் ஏற்க மறுத்துவிட்டது. பொடா நீதிமன்ற உத்தரவை எதிர்த்து வைகோ உள்பட 7 பேர் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தனர். இந்த மனுவை விசாரித்தத சென்னை ஐகோர்ட் வைகோ உள்ளிட்ட 9 பேர் மீது தொடரப்பட்ட பொடா வழக்கு ரத்து செய்து உத்தரவிட்டது.

உத்தரவுஐகோர்ட்சென்னைநீதிமன்றம்பொடாரத்துவழக்குவிடுதலைப்புலிகள்வைகோ
Comments (0)
Add Comment