ராமநாதபுரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 15 பேரையும், 3 படகுகளையும், இலங்கை கடற்படை சிறைபிடித்துச் சென்றுள்ளது. இவர்களில் 6 மீனவர்களை வவுனியா சிறையில் அடைக்க மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
எஞ்சிய 9 மீனவர்கள் ஊர்க்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுத்தப்பட்டு, யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.