மேலும் நாடாளுமன்றம் அளித்துள்ள ஒப்புதலின்படி காபினட் அந்தஸ்தில் 48 பேரும், துணை அமைச்சர்களாக 45 பேரும் நியமிக்கப்படவுள்ளனர். எனினும் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக பதவியேற்ற பிறகு அரசியல் சாசனத்தில் கொண்டுவரப்பட்ட 19ஆவது சட்டத்திருத்தமானது அதிகபட்சமாக 30 பேரை மட்டுமே காபினட் அமைச்சர்களாக இருக்க வழி செய்திருந்தது.
ஆனாலும் தேசிய அரசாங்கம் என ஒன்று அமையும்போது, அமைச்சரவையில் எவ்வளவு உறுப்பினர்கள் இருக்கலாம் என்பதை நாடாளுமன்றம் முடிவு செய்யலாம் எனவும் அதன் பிறகு கொண்டுவரப்பட்ட ஒரு திருத்தம் கூறியது.
அமைச்சரவையின் எண்ணிக்கையை 93 எனும் அளவுக்கு உயர்த்துவதை புதிதாக நியமிக்கப்பட்டுள்ள எதிர்கட்சித் தலைவர் சம்பந்தர் மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க ஆகியோர் எதிர்த்துள்ளனர்.