கனடாவின் மத்திய டொரோண்டோ பகுதியில் நேற்றைய தினம் வேன் ஒன்று பாதசாரிகள் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளதுள்ளதுடன் , 15 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ஓட்டுநர் கைது
வேனின் ஓட்டுனர் அந்த இடத்தில் இருந்து தப்பிச்செல்ல முயற்சித்த போது பொலிஸார் அவரை விரட்டிப் பிடித்து கைது செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான விசாரணையை பொலிஸார் மேற்கொண்டுவருவதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.