போட்டியையொட்டி நிகழ்ச்சி தொகுப்பாளர்களிடம் பேசிய டோணி, சுதந்திரதினம், குடியரசு தினங்களில் ராணுவத்தை நாம் நினைவு கூர்கிறோம். ஆனால், தினமும் ராணுவத்தினர் நமக்காக ஆற்றும் பணி அதிகம். அவர்களை தினமும் நினைவுகூர வேண்டும். அதேபோலத்தான், தாயும். தந்தை முக்கியமில்லையா என கேட்க கூடாது. தந்தையும் முக்கியம். ஆனால் தாயின் பங்களிப்பு மிக அதிகம். எனவே தினமும் காலையில் விழித்ததும், தாய்க்கு நன்றி (மனதிலாவது) சொல்லிக்கொள்ள பழக வேண்டும் என்றார் டோணி.