ஈழத்தின் மணிமகுடமாம் யாழ்ப்பாணத்தின் சிகரமாய் விளங்குவது அலங்காரக்கந்தனாம் நல்லூர் கந்தசுவாமி ஆலயம்.
ஆலயத்தில் தற்பொழுது இந்தவருடத்தின் மகோற்சபம் கடந்த 16 ஆம் திகதி ஆரம்பமாகி நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.
அதற்கு சிகரம் வைத்தால் போல் நாளை மறுதினம் நல்லூர் கந்தன் ஆலயத்தில் 02-09-2018 ஞாயிற்றுக்கிழமை காலை 06.15 மணியளவில் சண்முகசொர்ண(தங்கம்)சபை கும்பாபிக்ஷேகம் இடம்பெற உள்ளது.
சண்முகசொர்ண(தங்கம்)சபை கும்பாபிக்ஷேகத்திற்கான கிரிஜைகளை, இந்தியா சிதம்பர ஆலய தீட்சிதர்கள் நடத்திவைக்க உள்ளமை குறிப்பிடத்தக்கது.