பிரான்சில் கரும்புலிகள் நாள் நினைவு நிகழ்வு

பிரான்சில் கரும்புலிகள் நாள் நினைவு நிகழ்வு நேற்று நடைபெற்றுள்ளது மாவீரன் கப்டன் மில்லரோடு ஆரம்பமான கரும்புலிகளின் வீரவரலாறு ஆரம்பமான நாள் இன்றோடு 27 ஆண்டுகளை கடந்துள்ள நிலையிலும், இவர்களின் வீரமும், தியாகமும் இன்றும் ஒவ்வொரு ஈழத் தமிழர்களிடமும், உலகத் தமிழர்களிடமும் உள்ளிருந்து இயங்கும் பெரும் விடுதலை சக்தியாக செயற்படுகிறது என்றால் அது மிகையாகாது.

கரும்புலிகளை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 5ம் நாள் கடைப்பிடிக்கப்படும்நினைவு நாளே கரும்புலிகள் நாள்.தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முதல் தற்கொடைப் போராளியான மில்லர் 1987 யூலை 5ம் நாள் சிறிலங்கா பேரினவாத அரசுக்கும், அதன் படையினருக்கு எதிராக, நெல்லியடி மத்திய மகாவித்தியாலயத்தில் நிலைகொண்டிருந்த படைமுகாமின் மீது தற்கொடைத் தாக்குதலை நடத்திய நாளாகும்.

இந்த காவல் தெய்வங்களை நினைவு கூர்ந்து பிரான்சில் வணக்க நிகழ்வு நடைபெற்றது. அகவணக்கம், ஈகைச்சுடர், மலர்வணக்ம் மற்றும் கரும்புலிகள் பற்றிய நிகழ்வுகள் என்பன இடம்பெற்றுள்ளது.

காவல்கூர்ந்துதெய்வங்களைநடைபெற்றதுநிகழ்வுநினைவுபிரான்சில்வணக்க
Comments (0)
Add Comment