ஜனாபதியின் மக்கள் சேவை தேசிய நிகழ்ச்சித் திட்டம் இன்று யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
உள்நாட்டலுவல்கள் அமைச்சின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் இந்த ஆரம்ப நிகழ்வு நடைபெற்றது.
யாழ்ப்பாண மாவட்டச் செயலர் நா.வேதநாயகன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், உள்நாட்டலுவல்கள் அமைச்சர் மற்றும் அயலுறவு அமைச்சர், வடக்கு முதலமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள், பிரதேச செயலர்கள், அரச அதிகாரிகள் எனப் பலரும் கலந்து கொண்டதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது..