முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்தின் இப்தார் நிகழ்வு.

முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்தின் இப்தார் நிகழ்வு நேற்று (13மாலை 5.45 மணியளவில்பிரதேச  செயலகத்தின் உதவி பிரதேச செயலாளர் இ பிரதாபன் தலைமையில் இடம்பெற்றது.

சமூக சமய நல்லிணக்கத்திற்கான இப்தார் நிகழ்வு வாக இடம்பெற்ற இந்த நிகழ்வில் மௌலவி எம் ஆர் பைறூஸ் வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய குருக்கள் சிறிகந்ததாச குருக்கள் கூளாமுறிப்பு பங்குத்தந்தை அருட்பணி நிக்ஸன் கொலின் உள்ளிட்ட சமய தலைவர்கள் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ரூபவதி ரூபவதி கேதீஸ்வரன் உள்ளிட்ட மாவட்ட செயலக அதிகாரிகள் முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள பிரதேச செயலகங்களின் பிரதேச செயலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

 

இப்தார்கரைதுறைப்பற்றுமாவட்ட செயலக அதிகாரிகள்முல்லைத்தீவு
Comments (0)
Add Comment