வங்கதேசத்தின் முக்கியத் துறைமுக நகரான சிட்டகாங்கில் உள்ள கடற்படைத் தளத்தில் அமைந்துள்ள மசூதிகளில் இந்த குண்டு வெடிப்புகள் நிகழ்ந்தன. சிட்டகாங் மற்றும் இஸ்ஸா கான் கடற்படைத் தளத்தில் உள்ள இரு மசூதிகளில் பிற்பகல் தொழுகைக்குப் பிறகு குண்டு வெடிப்புகள் நிகழ்ந்தன. இதில் 6 பேர் காயமடைந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக இருவரைக் கைது செய்துள்ளோம் என்று சிட்டகாங் நகரின் காவல் துறை தெரிவித்துள்ளது.