ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் நல்லிணக்க முனைப்புக்கள் வரவேற்கப்பட வேண்டியவை என அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் ஜோன் கெரி தெரிவித்துள்ளார்.
தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நல்லிணக்கம் மற்றும் சமாதானத்தை ஏற்படுத்துவதற்கு ஆழமான அர்ப்பணிப்பை அரசாங்கம் வெளிப்படுத்தி வருவதாகத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி பரக் ஒபாமா மற்றும் அமெரிக்க மக்களின் சார்பில் புத்தாண்டு வாழ்த்துக்களை இலங்கை மக்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெருமிதம் கொள்வதாகத் தெரிவித்துள்ளார்.