குறித்த பேரணியில் அதிகளவான பெண்கள் கலந்து கொண்டதுடன், கொலையாளிக்கு எதிராக சுலோக அட்டைகளை தாங்கியவாறு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். இந்தப் பேரணியானது கல்முனை சுகாதார பணிமனையின் முன் ஆரம்பமாகி மட்டக்களப்பு, கல்முனை பிரதான வீதியினூடாக கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தினுள் சென்று பிரதேச செயலாளரிடம் மகஜரொன்றினையும் கையளித்ததுடன் கொலையாளியின் உருவப்பொம்மையை எரியூட்டி எரித்தமையும் குறிப்பிடத்தக்கது.