அரசியலமைப்பு உருவாக்கம்! மக்களுக்கு கிடைத்துள்ள சிறந்த சந்தர்ப்பம்

புதிய அர­சியல் அமைப்பு உரு­வாக்கம் தொடர்­பாக மக்­க­ளி­னது கருத்­துக்­களை உள்­வாங்கும் செயற்­பா­டா­னது தமிழ் மக்­க­ளுக்கு கிடைத்­துள்ள சிறந்த சந்­தர்ப்­ப­மாகும். இதனை தமிழ் மக்கள் அனை­வரும் முழு­மை­யாக பயன்­ப­டுத்த வேண்டுமென வட­மா­காண சபையின் எதிர்­க்கட்சி தலைவர் சி.தவ­ராசா வேண்­டுகோள் விடுத்­துள்ளார்.

புதிய அர­சியல் அமைப்பு உரு­வாக்­கத்­திற்கு மக்­களின் கருத்­துக்­களை பதி­வு­செய்யும் செயற்­பாடு தொடர்­பாக அக் குழுவின் அங்­கத்­தவர் என்ற ரீதியில் அவ­ரிடம் கேள்­வி­யெ­ழுப்­பிய போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

இவ் விடயம் தொடர்­பாக அவர் மேலும் தெரி­வித்­தி­ருப்­ப­தா­வது,

அமைச்­ச­ர­வையின் அனு­ம­தி­யுடன் பிர­தமர் காரி­யா­ல­யத்தால் புதிய அர­சியல் உரு­வாக்கம் எவ்­வாறு அமைய வேண்டும் என்­பது தொடர்­பான பொது­மக்­களின் கருத்­துக்­களை பதி­வு­செய்­வ­தற்­காக உரு­வாக்­கப்­பட்ட குழு­வா­னது இலங்­கையின் சகல மாவட்­டங்­க­ளிலும் தனது அமர்­வு­களை நடத்தி வரு­கின்­றது.

அந்­த­வ­கையில் இச் செயற்­பா­டா­னது நல்ல­தொரு விட­ய­மாகும். ஏனெனில் இலங்­கையின் 1972ஆம் ஆண்டு அர­சியல் யாப்­பா­னாலும் சரி 1978ஆம் ஆண்டு யாப்­பா­னாலும் சரி மக்கள் கருத்து உள்­வாங்கி அமைக்­கப்­ப­ட­வில்லை. அந்­த­வ­கையில் இது ஒரு புதிய முயற்­சி­யாகும். குறிப்­பாக கொழும்பில் இடம்­பெற்ற அமர்­வு­களில் பல முன்­னேற்­ற­க­ர­மான கருத்­துக்கள் கூறப்­பட்­டுள்­ளன.

இக்­கு­ழுவின் அமர்­வுகள் வடக்கு, கிழக்கு மாகா­ணங்­களில் இடம்­பெறும் போது பெரு­ம­ள­வான தமிழ் மக்கள் இதில் தமது கருத்­துக்­களை பதிவு செய்ய வேண்டும். ஏனெனில் இது தமிழ் மக்­க­ளுக்கு கிடைத்த நல்­ல­தொரு சந்­தர்ப்பம்.

உரு­வாக்­கப்­ப­டு­கின்ற புதிய அர­சியல் அமைப்­பிலே தமிழ் மக்­க­ளு­டைய உரி­மை­கள் எவ்­வாறு நிலை­நாட்­டப்­பட வேண்டும் என்­பது தொடர்­பாக தமது கருத்தை கூற வேண்டும். இதன்­மூலம் மக்­க­ளது கருத்­துக்கள் இக் குழுவின் ஊடாக அர­சியல் அமைப்பு சபைக்கு கொண்டு செல்­லப்­படும்.

இக்­கு­ழுவில் கருத்­துக்­களை கூறு­வ­தற்கு அர­சி­ய­ல­மைப்பு தெரிந்­தி­ருக்க வேண்­டிய அவ­சி­யமோ அல்­லது சட்­ட­வாக்க மொழி­நடை தெரிந்­தி­ருக்க வேண்­டிய அவ­சி­யமோ தேவை­யில்லை.

ஒரு சாதா­ரண நபர் புதிய அர­சியல் அமைப்பு இவ்­வாறு தான் இருக்க வேண்டும் என தன் மனதில் எழும் விட­யத்தை கூற முடியும். அக் கருத்தை எழு­தியும் கொடுக்­கலாம். வாய் வார்த்­தைகள் மூல­மா­கவும் பதிவு செய்­யலாம்.

அத்­துடன் நாங்கள் கூறு­வ­தெல்லாம் அர­சி­ய­ல­மைப்பில் உள்­வாங்­கு­வார்­களா என்ற எண்ணம் கொள்ளாமல் முதலில் கருத்துக்களை பதிவு செய்வோம். அதன் பின்னர் அவற்றை வலுப்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்வோம். எனவே, அனைத்து தமிழ் மக்களும் இச் சந்தர்ப்பத்தை முழுமையாக பயன்படுத்த வேண்டும் என்றார்.

அரசியலமைப்பு உருவாக்கம்கிடைத்துள்ளசந்தர்ப்பம்சிறந்தமக்களுக்கு
Comments (0)
Add Comment