டி நிப்ரோ அணியின் முதல் கோலை யூரி வகல்கோ அடித்து அந்த அணியை வெற்றிப் பாதையில் இட்டுச் சென்றுள்ளார். அதனை தொடர்ந்து அந்த அணியின் மற்றொரு வீரரான விடாலி கிரியேவ் அடுத்த கோலை அடித்ததைத் தொடர்ந்து 2-0 கோல் கணக்கில் உக்ரைன் அணி வெற்றியை பெற்றது.
இந்நிலையில், உக்ரைன் நாட்டின் எப்.சி. பெகாரெஸ்டி அணி இன்று நடைபெறும் போட்டியில் பிரேசில் அணியின் அத்லெட்டிகோ பேராநேயன்ஸ் அணியுடன் விளையாடுகிறது. மேலும், நாக்ஜீ கோப்பைக்கான போட்டியில் வெளிநாட்டை சேர்ந்த 8 அணிகள் குறித்த போட்டித் தொடரில் விளையாடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.