அவுஸ்திரேலிய அணித்தலைவர் மன்னிப்பு கேட்டிருந்தால் அதனை ஏற்றுக்கொள்கிறேன் –விலியர்ஸ்

அவுஸ்திரேலிய அணித்தலைவர் மன்னிப்பு கேட்டிருந்தால் அதனை ஏற்றுக்கொள்கிறேன் என்று தென் ஆப்ரிக்க ஒருநாள் அணித்தலைவர் ஏ.பி.டிவிலியர்ஸ் கூறியுள்ளார்.

அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் எதிரணியினரை நோக்கி வசைச்சொற்களைப் பயன்படுத்தும் போது பல தருணங்களில் அது விரும்பத் தகாத தனிநபர் தாக்குதலாக அமைகிறது என்று தென் ஆப்பிரிக்க ஒருநாள் அணித்தலைவர் ஏ.பி.டிவிலியர்ஸ் சாடியுள்ளார்.

இதுகுறித்து டிவிலியர்ஸ் கூறியுள்ளதாவது, அஸ்திரேலியா வீரர்கள் எதிரணியினரின் அந்தரங்கங்களைக் குறிப்பிட்டு பேசுகின்றனர். இதனை எங்கள் அணியின் சில வீரர்கள் முற்றிலும் விரும்புவதில்லை.

ஆனால் இது ஆட்டத்தின் ஒரு பகுதிதான் என்றாலும் மைதானத்தில் முடிந்து விடுவதுதான் என்றாலும் அதற்குப் பிறகு களத்திற்கு வெளியே நாங்கள் நட்பு பாராட்ட வேண்டும் என்று அவர்கள் எதிர்பார்க்கக் கூடாது. நாங்களும் ஆட்டத்தை ஆக்ரோஷமாக ஆடுபவர்கள்தான், ஸ்லெட்ஜிங் ஆட்டத்தின் ஒரு வடிவம்தான் அதிலும் எங்களால் சிறப்பாகச் செயல்பட முடியும் என்று கூறியுள்ளார்.

மேலும் டெஸ்ட் தொடரில் நடந்த விஷயங்களுக்காக அவுஸ்திரேலியா அணித்தலைவர் மைக்கேல் கிளார்க் மன்னிப்பு கேட்டதாக, கூறப்படுகிறது, அதுபற்றி எனக்குத் தெரியாது, மன்னிப்பு கேட்டிருந்தால் அது ஏற்றுக் கொள்ளப்படும் என்று கூறியுள்ளார்.

அணித்தலைவர்அதனைஅவுஸ்திரேலியஆப்ரிக்கஎன்றுஏ.பி.டிவிலியர்ஸ்ஏற்றுக்கொள்கிறேன்ஒருநாள்கூறியுள்ளார்கேட்டிருந்தால்தென்மன்னிப்பு
Comments (0)
Add Comment