இராணுவப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த லெப்டினன்ட் கேணல் துவான் முத்தலிஃப் கொலையுடன் தொடர்பு கொண்டிருந்தார் என்ற சந்தேகத்தின் பேரில்சந்தேகத்தின் பேரில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஒருவர் ரயில்வே கடவு வாயிலுக்கு அருகில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
பொரளை லெஸ்லி ரணகல மாவத்தையில் சனிக்கிழமை (20) அதிகாலை தொழில் தகராறு காரணமாக அவர் கொல்லப்பட்டிருக்கலாம் என பொலிசார் கூறுகின்றனர். களனி கல்பொரல்ல பகுதியைச் சேர்ந்த ஐ.டபிள்யூ.சஞ்சீவ (54) என்ற நபரே உயிரிழந்துள்ளார். அவரது பூர்வீக வீட்டிற்கு அருகில் அவர் சுடப்பட்டார்.
துப்புரவு சேவை ஒப்பந்தங்களை பெற்றுக்கொண்டு வர்த்தக இடங்களை சுத்தம் செய்வதற்கு பணியாளர்களை ஆட்சேர்ப்பு செய்யும் தொழிலில் ஈடுபட்டு வரும் இவர் தினமும் காலை பொரளையில் உள்ள தனது பூர்வீக வீட்டிற்கு வருவதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
வழமை போன்று, அவர் தனது மகளுடன் சனிக்கிழமை (20) அதிகாலை களனியிலிருந்து பொரளைக்கு வந்தார். அவரது மூத்த சகோதரி தற்போது பூர்வீக வீட்டில் வசித்து வருகிறார். அவரது மகள் வீட்டிற்குச் சென்றிருந்தபோது, அந்த நபர் வீட்டின் முன் வீதியில் நின்று கொண்டிருந்தார்.
அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த நபர் ஒருவர் T-56 துப்பாக்கியால் சுட்டுள்ளதுடன், தரையில் விழுந்த பின்னரும் துப்பாக்கியால் சுட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.