இதுகுறித்து, அணியின் மூத்த தேர்வாளர் ஹாருன் ரஷீது கூறுகையில், “பயிற்சியின்போது சோஹைலின் தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. சிறந்த மருத்துவர்கள் மூலமாக அவரது காயம் பரிசோதிக்கப்பட்டு வருகிறது. எனினும், அவரை தொடர்ந்து விளையாடச் செய்வதா அல்லது பாகிஸ்தானுக்கு திருப்பி அனுப்புவதா என்பது குறித்து அணி நிர்வாகம் முடிவு செய்யவில்லை’ என்று தெரிவித்துள்ளார்.
எனினும், காயத்தில் இருந்து மீண்டுவரஹாரிஸ் சோஹைல் 2 வாரம் ஓய்வில் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தகவல்கள் தெரிவிக்கின்றன.