அதனைத் தொடர்ந்து 17 மற்றும் 21வது நிமிடங்களில் கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பைப் பயன்படுத்தி மலேசிய அணி, அடுத்தடுத்து இரண்டு கோல்கள் அடித்து இந்திய அணிக்கு அதிர்ச்சி கொடுத்தது.
மேலும் ஆட்டத்தின் 49வது நிமிடத்தில் இந்தியாவின் ஜஸ்ஜித் சிங் (JASJIT SINGH) பதில் கோல் அடித்து சமன் செய்தார். போட்டி முடிய 4 நிமிடங்கள் இருந்தபோது, அவர் மீண்டும் கோல் அடித்து இந்திய அணியின் வெற்றிக்கு உதவினார். நாளை நடைபெறும் அரையிறுதியில் இந்திய அணி, பெல்ஜியம் அணியை எதிர்கொள்கிறது.