அந்தப் படகுகளில் பயணம் செய்தவர்கள் சோமாலியா, எதியோப்பியா எரித்திரியா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது. அவர்கள் இத்தாலியை நோக்கிப் பயணத்தை மேற்கொண்டிருந்த வேளையிலேயே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.
அந்தப் படகுகளில் பயணம் செய்த 29 பேர் மீட்புப் பணியாளர்களால் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.
அதேசமயம் நேற்று திங்கட்கிழமை ஐரோப்பாவுக்கு செல்லும் முகமாக லிபிய பிராந்தியத்திலிருந்து புறப்பட்ட குடியேற்றவாசிகளுடன் பயணத்தை மேற்கொண்ட மிதவைப் படகொன்று லிபிய கடற்கரைக்கு அப்பால் கவிழ்ந்துள்ளது.
இந்த சம்பவத்தில் உயிரிழந்த 6 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. அதேசமயம் அந்தப் படகில் பயணித்த 108 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.
மீட்கப்பட்டவர்கள் கிரேக்கத் தீவொன்றுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்படாத செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த வருடம் ஐரோப்பாவை சென்றடையும் முயற்சியில் சுமார் 180,000 பேர் ஆபத்து மிக்க கடல் பயணத்தை மேற்கொண்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவிக்கிறது. அவர்களில் சுமார் 800 பேர் உயிரிழந்துள்ளனர்.