ஐ.நா பொதுச்செயலர் இன்றையதினம் யாழ்ப்பாணம் வருகைதரவுள்ள நிலையில் யாழ்.செயலகத்திற்கு முன்பாகவும் யாழ். பொதுநூலகத்திற்கு முன்பாகவும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறுகின்றன. காணாமற் போனோரின் உறவின ர்கள்,வலிவடக்கிலிருந்து இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் உள்ளோர் இந்த ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
காணாமற் போனவர்கள் தொடர்பாக சர்வதேச விசாரணைக்கு வலியுறுத்தியும் வலிவடக்கில் இராணுவத்தினர் வசமுள்ள மயிலிட்டி உட்பட்ட காணிகளில் மீள்குடியேற்றம் மேற்கொள்ளப்படவேண்டுமெனத் தெரிவித்துமே இந்த ஆர்ப்பா ட்டங்கள் இடம்பெறுகின்றன.